Friday, January 13, 2012

என் பார்வையில்!!!

எந்த ராமனும்
இனி அகலிகைகளுக்கு
சாப விமோசனம் தரவேண்டாம்
இன்னும் இந்திரன்கள்
இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்!!

--------------------------------------------------------

நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
ரை பிடித்த என் எண்ணங்களுக்கும் !!!

-----------------------------------------------------------

என் கப்பல் மூழ்கிடும்
கவலையில்லை..
கொள்வது தானே கடலின் இயல்பு !!!

------------------------------------------------

கர்த்தர் ரட்சிக்கும் முன்னே
நான் ஞானஸ்தானம் பெற்றுவிட்டேன்
எனக்கு முன் செல்லும்
அவர் சமூகம் என்பதால்!!!

---------------------------------------------

இன்னும் என்ன என்று தானே
கேட்கிறீர்கள்...
என்ன செய்ய இன்னும் இருக்கிறது
எனக்கான பக்கங்கள்!!!

-------------------------------------------------

11 comments:

நட்புடன் ஜமால் said...

துணுக்கள் போன்றவை படிக்க எளிமையா இருக்குங்க, இத மாதிரி இன்னும் முயற்சி செய்ங்க ...

ஜீ... said...

//நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
கரை பிடித்த என் எண்ணங்களுக்கும்//
எனக்கும்! டச் பண்ணிட்டீங்க!
இந்தவரிகள் மிகவும் பிடித்திருக்கிறது!

ஓசூர் ராஜன் said...

கவிதைகள் ஹைக்கூ முத்துக்கள்! உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! பொங்கலுக்கும்!!

சத்ரியன் said...

தத்துவ கவிதைகள் அருமையா எழுதறீங்களே!

அப்பப்போ இப்படியும் எழுதி வையுங்க.

ஹேமா said...

ஒவ்வொன்றும் அழுத்தம் !

விமலன் said...

நல்ல கவிதைகள்.வாழ்த்துக்கள்.

சுசி said...

உங்க பார்வை ஷார்ப்பா இருக்கு :)

பித்தனின் வாக்கு said...

//நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
கரை பிடித்த என் எண்ணங்களுக்கும்//

karaiya?. illai Kharaiya?...

puriyalai. but theme super.

இந்திரா said...

//நாளை மறு நாள் பொங்கல்
வெள்ளையடிக்க வேண்டும்
கரை பிடித்த என் எண்ணங்களுக்கும் !!!//


முடித்தாயிற்றா???

இந்திரா said...

நலமா தோழி???

நம்ம பக்கம் வர்றதே இல்லையே???

குடந்தை அன்புமணி said...

உங்களின் கவிதை நடையில் பெரும் மாற்றங்கள்... மிகவும் அருமையாக இருக்கிறது... வாழ்த்துகள்.